Saturday, October 10, 2009

இலங்கையைச் சாம்பலாக்கு

தமிழினம் அழுகிறது அனுமனே


உன்

வால் சுமந்த தீயினாலல்ல

இலங்கையை எரியூட்டாததால்



நிழல் கூட

தலைதெரிக்க ஓடுகிறது

அகதியாக அல்ல

மரணத்தில் விடுதலை தேடி



முக்கால அழுகுரல் இன்னும்

முழுதாய் ஓயவில்லை

சமுத்திர திட்டமாம்

பாலத்தில் பிரச்சனையாம்

சாகிற மக்களுக்காய்

உண்ணாமல் போராட்டமாம்

யாரை நம்ப?



எங்கே

உன் வாலைக் கொடு

தீயிட்டனுப்புகிறேன்

இம்முறேயேனும் மிச்சமின்றி

இலங்கையைச் சாம்பலாக்கு..


***********************************


இதை ஒரு மின்னஞ்சலில் கிடைக்க பெற்றேன்..

No comments: